weather

img

தென்மேற்கு பருவக்காற்றால் தொடர் மழைக்கு வாய்ப்பு இல்லை... தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தகவல்....

புதுதில்லி:
தென்மேற்கு பருவக்காற்று மெதுவாக முன்னேறும் என்பதால்தொடர் மழைக்கு சாதகமாக இல்லை என்று தேசிய வானிலைமுன்னறிவிப்பு மையம் தெரி வித்துள்ளது.

இந்திய வானிலை துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளதாவது:

தென்மேற்கு பீகார், தென்கிழக்குஉத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் கடல் மட்டத்தில் இருந்து 5.8 கி.மீ உயரத்தில் புயல் சுழல் உள்ளது. இந்த புயல் சுழலில்உள்ள காற்றழுத்தம், தென்மேற்கு பீகார், தென்கிழக்கு உத்தரப் பிரதேசம், தெற்கு சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், தெற்கு கடலோர ஆந்திரம்வரை கடல் மட்டத்திலிருந்து 1.5 கி.மீ உயரம் வரை காணப்படுகிறது.புயல் சுழற்சியில் கிழக்கு, மேற்கு காற்றழுத்தம் ஜார்க்கண்ட் முதல்வடக்கு குஜராத் வரையும், வடக்கு சத்தீஸ்கரில் இருந்து தெற்கு மத்தியப் பிரதேசம் வரையும் கடல் மட்டத்தில் இருந்து 3.1 கி.மீ தொலைவில் காணப்படுகிறது.

இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தர்கண்டில் ஒரு சில பகுதிகளில்இடி மின்னல் மற்றும் காற்றுடன் (மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர்) கூடிய மழை, ஹரியானா, சண்டிகர்மற்றும் தில்லியில் ஒரு சில பகுதிகளில் மின்னல் மற்றும் காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர்)கூடிய மழை, ஜம்மு-காஷ்மீர், லடாக்,கில்கிட்-பல்திஸ்தான், முசாபர்பாத், மேற்கு உத்தரப் பிரதேசம் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஒரு சில பகுதிகளில் மின்னல் மற்றும் காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர்) கூடிய மழை பெய்யக்கூடும்.

தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு
கிழக்கு உத்தரப்பிரதேசம், கிழக்கு ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், விதர்பா, சத்தீஸ்கர், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா அருணாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, கடலோர ஆந்திரப் பிரதேசம், ஏனாம், தெலுங்கானா ராயலசீமா, கேரளா, மாஹே, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில பகுதிகளில்மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகம் வரையிலான சூறைக்காற்றுடன் கூடிய மழை மேற்கு ராஜஸ்தானின் சில பகுதிகளில் பெய்யக்கூடும்.மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகம் வரையிலான பலத்த காற்று தென்மேற்கு, மேற்கு மத்திய மற்றும் வடகிழக்கு அரேபிய கடல்,குஜராத் கடற்கரை பகுதி, மேற்கு மத்திய வங்காள விரிகுடா மற்றும்ஆந்திரப்பிரதேச கடலோர பகுதி களில் வீசக் கூடும் என்பதால் இந்த பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.இவ்வாறு தெரிவித்துள்ளது.

;